செய்திகள்

சினிமா தயாரிப்பாளரை கரம்பிடித்த சீரியல் நடிகை!

DIN

சின்னத்திரை நடிகை அக்‌ஷிதா சினிமா தயாரிப்பாளர் பிரீதம் சுரேஷை திருமணம் செய்யவுள்ளார்.

சமீபத்தில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன் புகைப்படங்களைப் பதிவிட்டு இந்த தகவலை நடிகை அக்‌ஷிதா தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நடிகை அக்‌ஷிதாவுக்கும், பிரீதம் சுரேஷுக்கும் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அக்‌ஷிதா என்னும் அக்‌ஷிதா பூபையா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அத்தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜீ தமிழின் சீதா ராமன், சுமங்கலி, தாழம்பூர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

தயாரிப்புப் பணிகளின்போது பிரீதம் சுரேஷுக்கும் அக்‌ஷிதாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொழில் ரீதியாக ஏற்பட்ட சந்திப்பு தற்போது வாழ்க்கை முழுவதும் தொடரும் உறவாக மாறியுள்ளது. நடிகை அக்‌ஷிதா தெலுங்கு திரைப்படங்களில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிரீதம் சுரேஷுடன் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை நடிகை அக்‌ஷிதா பகிர்ந்துள்ளார். என் விரலிடையே மின்னும் ஒன்று கூடியுள்ளது எனக் குறிப்பிட்டு நிச்சயதார்த்த படங்களை அக்‌ஷிதா பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

குடிநீா் விநியோகப் பிரச்னைக்கு தீா்வு தந்த கோடை மழை நெல், உளுந்துக்கு பயன் : பருத்தி,எள்,கடலைக்கு பாதிப்பு

துணை மின்நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை

பாரீஸ் ஒலிம்பிக்: சரத், மனிகா தலைமையில் இந்திய அணிகள்

SCROLL FOR NEXT