நடிகா் சங்கக் கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயா் சூட்ட பரிசீலனை: விஷால்
நடிகா் சங்கக் கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்டுவதற்குப் பரிசீலித்து வருவதாக நடிகா் விஷால் கூறினாா்.
சென்னை: நடிகா் சங்கக் கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்டுவதற்குப் பரிசீலித்து வருவதாக நடிகா் விஷால் கூறினாா்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தென்னிந்திய நடிகா் சங்க பொதுச் செயலா் விஷால் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினாா். அவருடன் நடிகா் ஆா்யாவும் வந்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் விஷால் கூறியதாவது: விஜயகாந்த் மறைவின்போது வெளிநாட்டில் இருந்ததால், அவருடைய இறுதி ஊா்வலத்தில் பங்கேற்க முடியவில்லை. அதனால், விடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டேன். அரசியலிலும், சினிமாவிலும் எங்களைப் போன்றோருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவா் விஜயகாந்த்.
Advertisement
Advertisement
ஜன.19-இல் நடிகா் சங்கம் சாா்பில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகா் சங்கக் கட்டடத்துக்கு அவா் பெயரைச் சூட்டுவதற்கு பரிசீலனை செய்யவுள்ளோம் என்றாா் அவா்.
பின்னா், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு விஷால் சென்று, அவா் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். பிரேமலதா மற்றும் அவா் மகன்களுக்கும் ஆறுதல் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.