இயக்குநர் செல்வராகவன் திரையரங்கம் செல்வது குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ஜிவி பிரகாஷை வைத்து, மெண்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி - 2 ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் செல்வராகவன், “எனக்கு திரையரங்குக்குச் சென்று திரைப்படம் பார்க்கத்தான் பிடிக்கும். ஆனால், அங்கு சென்றால் பலரும் ஆயிரத்தில் ஒருவன் - 2 எப்போது நிகழும் எனக் கேட்கின்றனர். இதனாலேயே நான் திரையரங்குகளுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ள அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டார். ஆனால், பட்ஜெட் மற்றும் சில காரணங்களால் அப்படம் துவங்கப்படாமல் இருக்கிறது.
இதையும் படிக்க: டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு சொகுசுக் கார் பரிசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.