நினைத்தபடி நடக்கவில்லை... திருமணம் பற்றி அதிர்ச்சியளித்த ரித்விகா!
நடிகை ரித்விகா தனது திருமணம் குறித்து கூறியிருப்பதாவது...
நடிகை ரித்விகா இன்ஸ்டா பக்கத்தில் தனது திருமணம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு, “அது நினைத்தபடி நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
பாலாவின் பரதேசி படத்தில் அறிமுகமானாலும் மெட்ராஸ் படத்தின் மூலம் கவனம் பெற்றார். பின்னர், கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, டிஎன்ஏ படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்ற நடிகை ரித்விகா மக்கள் மனதில் இடம்பிடித்து, சிறந்த போட்டியாளாரகச் செயல்பட்டு வெற்றியாளராக மாறினார். கடைசியாக இவரது நடிப்பில் தண்டகாரண்யம் திடைப்படம் வெளியானது.
Advertisement
திறமையான நடிகையாக இருந்தும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்தாண்டு அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
பின்னர், திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இதனை ரித்விகாவே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்வி பதில் உரையாடலில், “உங்கள் திருமணத்தில் ஏதும் பிரச்னையா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரித்விகா, “நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.