31 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து நடிக்கும் பிரபு - சுகன்யா!
மேரி கோல்ட் படத்தின் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ள பிரபு - சுகன்யா குறித்து...
நடிகர்கள் பிரபு மற்றும் சுகன்யா இருவரும் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மேரி கோல்ட் என்ற புதிய திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
ரக்ஷன் நாயகனாக நடிக்கும் இந்தப் புதிய படத்துக்கு “மேரி கோல்ட்” எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், நாயகியாக நம்ரிதா நடிக்கிறார்.
குடும்பப் பின்னணியிலான திரைப்படமாக எடுக்கப்படும் மேரி கோல்ட் திரைப்படத்தை, பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். ஆர். ரவீந்திரன் தயாரிக்கிறார்.
Advertisement
Advertisement
மேலும் இந்தப் படத்தில், நடிகர்கள் பிரபு, சுகன்யா, விவேக் பிரசன்னா, வடிவுக்கரசி, சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி, ஸ்டாலின், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு மற்றும் சுகன்யா இருவரும் இந்தப் படத்தின் மூலம், மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
முன்னதாக செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, மிஸ்டர் மெட்ராஸ், படத்தில் பிரபு மற்றும் சுகன்யா இணைந்து நடித்திருந்தனர்.
முன்னதாக, நயன்தாரா, கவின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாய் படத்திலும் இவர்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Actors Prabhu and Sukanya are reuniting after 31 years to star in a new film titled Marigold.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.