FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கிராமி விருதில் வரலாற்றுச் சாதனை படைத்த கென்ட்ரிக்!

அமெரிக்க ராப் இசைக் கலைஞர் கென்ட்ரிக் நிகழ்த்திய சாதனை குறித்து...

Updated On : 3 பிப்ரவரி 2026, 4:57 pm IST
கிராமி விருது வென்ற கென்ட்ரிக். - படம்: ஏபி
பகிர்:

2026 கிராமி விருது: அமெரிக்க பாப் இசைக் கலைஞர் கென்ரிக் லாமர் இந்தாண்டு ஐந்து கிராமி விருதுகளைப் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளார்.

கிராமி விருது வரலாற்றிலேயே அதிக விருதுகள் பெற்ற ராப் இசைக்கலைஞராக கென்ரிக் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

லாஸ் ஏஞ்சலீஸில் 68-ஆவது கிராமி விருது விழா நிகழ்வுகள் கடந்த பிப்.1ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்றன.

Advertisement

Advertisement

இந்த விழாவில் பாப் இசைக் கலைஞர் கென்ரிக்கு (38 வயது) ஐந்து பிரிவுகளில் கிராமி விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த ஆல்பம், ரெகார்ட் ஆஃப் த இயர், சிறந்த மெலோடிக் ரேப் இசை, சிறந்த ராப் இசை, சிறந்த ராப் இசை நடனம் என ஐந்து பிரிவுகளில் வழங்கப்பட்டன.

இதுவரை, மொத்தமாக 66 பிரிவுகளில் போட்டியிட்ட கென்ரிக் லாமர் 27 விருதுகளை வென்றுள்ளார். இதற்கு முன்பாக அதிகபட்சமாக ஜே-இசட் என்ற ராப் இசைக் கலைஞர் 26 விருதுகளைப் பெற்றிருந்தார்.

இந்தாண்டு விருது வென்ற கென்ரிக் பேசியதாவது:

இது எப்போதுமே ஹிப்-ஹாப்தான் நண்பா. என்னைப் பற்றி பேசுவதில் நான் சிறப்பானவன் இல்லை. ஆனால், அதை இசை வழியாக சரியாக வெளிப்படுத்துவேன்.

எப்போதுமே இதைச் சொல்லுவேன் - ஹிப் ஹாப் எப்போதுமே இங்குதான் இருக்கும். நாங்கள் இந்த மேலங்கியுடனேதான் இருப்போம்.

நாங்கள் பார்க்க நன்றாக இருப்போம். எங்களுடன் எங்கள் மக்கள் எப்போதும் இருப்பார்கள். இந்தக் கலாசாரத்துடனேதான் இருப்போம் என்றார்.

summary

2026 Grammy Awards: American pop musician Kendrick Lamar has set a new record by winning five Grammy Awards this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments