மக்கள் நினைத்தால் விஜய் முதல்வர் ஆவார்: சிவகுமார்
விஜய் குறித்து சிவகுமார்...
நடிகர் சிவகுமார் தவெக தலைவர் விஜய் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சிவகுமார் சில ஆண்டுகளுக்கு முன்பே நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேரம் ஆன்மீகம், இலக்கியம், ஓவியம் என அவரின் விருப்பமான ஈடுபாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நிகழ்வில் கலந்துகொண்ட சிவகுமாரிடம், ‘நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்? அவர் முதல்வர் ஆவாரா?” எனக் கேட்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதற்கு சிவகுமார், ‘அவர் வந்தே (முதல்வராக) ஆக வேண்டுமென மக்கள் நினைத்தால் வந்துவிடுவார்.” எனத் தெரிவித்தார். எதையும் வெளிப்படையாகத் தைரியமாகப் பேசும் சிவகுமாரின் இக்கருத்து கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.