ஒரே நாளில் நிறைவடைந்த இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள்!
இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள் ஒரே நாளில் நிறைவடைந்தது தொடர்பாக...
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள் ஒரே நாளில் நிறைவடைந்துள்ளன.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று நீண்ட நாள்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள் அண்மையில் நிறைவடைந்தன.
இலக்கியா
Advertisement
Advertisement
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இலக்கியா தொடர் 985 எபிசோடுகளுடன் நிறைவடைதது.
இந்தத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நந்தன் லோகநாதன், ஷாம்பவி குருமூர்த்தி நடித்துவந்தனர்
பரபரப்பான திருப்புமுனைக் காட்சிகளுடன் இலக்கியா தொடர் கடந்த ஜன. 14 ஆம் தேதி நிறைவு பெற்றது.
ஆனந்த ராகம்
நடிகை அனுஷா ஹெக்டே நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நடிகர் அழகப்பனும் நடித்து வந்த தொடர் ஆனந்த ராகம். இந்தத் தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தது.
பிரீத்தி சஞ்சீவ், ஸ்வேதா செந்தில்குமார், இந்து செளத்ரி, ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்தனர். இந்தத் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் ஜன. 14 ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆனந்த ராகம் தொடர், 1043 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது.
The serials Ilakkiya and Anandha Ragam, which were being broadcast on Sun TV, have concluded on the same day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.