ரஜினி படத்திற்குப் பின் சிலம்பரசனை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து!
அஷ்வத் மாரிமுத்து - சிலம்பரசன் படம் குறித்து...
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் படம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா பேசியுள்ளார்.
டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசன் படத்தை இயக்குவார் என அறிவிப்பு வெளியானது. ஆனால், திடீரென நடிகர் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து அழைப்பு வந்ததால் ரஜினி - 173 படத்திற்கான பணிகளில் அஷ்வத் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையே, நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் அவரது முதல் படத்தில் அஷ்வத் மாரிமுத்து காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. டிராகன் திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்ட அஷ்வத், அப்படத்திலேயே சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
Advertisement
Advertisement
இவை ஒருபுறம் இருந்தாலும், நடிகர் சிலம்பரசனுடன் அறிவிக்கப்பட்ட படம் என்ன ஆனது? என்கிற கேள்விகள் அடிக்கடி எழுகின்றன.
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா, “நடிகர் சிலம்பரசனின் 51-வது படமாக அஷ்வத் மாரிமுத்து படம் உருவாகும். இந்தாண்டில் துவங்கப்பட இருந்த படப்பிடிப்பை அடுத்தாண்டு பிப்ரவரிக்கு திட்டமிட்டுள்ளோம். சிலம்பரசன் அரசன் திரைப்படத்தையும், அஷ்வத் அவரின் பணிகளையும் முடித்தபின் எஸ்டிஆர் 51 ஆரம்பமாகும்” எனக் கூறியுள்ளார்.