FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிக்மா படத்தின் வெளியீட்டிற்காக எனது தந்தை காத்திருக்கிறார்: ஜேசன் சஞ்சய்

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அளித்த பேட்டி குறித்து...

16 செப்டம்பர் 2026, 5:56 pm IST
ஜேசன் சஞ்சய், முதல்வர் விஜய் - படங்கள்: எக்ஸ் / ஜேசன் சஞ்சய், சிஎம்ஓ தமிழ்நாடு
பகிர்:

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், “சிக்மா திரைப்படத்தின் வெளியீட்டிற்காக எனது தந்தை காத்திருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இப்படம் அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா செப். 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் கூறியிருப்பதாவது:

சிக்மா திரைப்படத்தின் வெளியீட்டிற்காக எனது தந்தை காத்திருக்கிறார். அவர் எனது படத்தை புரமோஷன் செய்யமாட்டார்.

படத்தை புரமோட் செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். அதையும் இதையும் ஒன்றின்மேல் ஒன்று கலக்க விரும்பவில்லை. அவர் தற்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்கு அதிகமான வேலைகள் இருக்கும். எனது படம் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க அவரும் ஆவலுடன் இருக்கிறார் என்றார்.

summary

My father is waiting for the release of the film 'Sigma': Jason Sanjay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments