FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

இந்திய அளவில் குடும்பக் கட்டுப்பாடு குறித்த புரிதலில் இந்த மாநில ஆண்கள் தான் முதலிடம் பெறுகிறார்கள்!

கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வது மற்றும் ஆணுறை பயன்பாட்டில் இன்றளவும் இந்திய ஆண்களிடையே மூட நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. அதன் காரணமாகவே தம்பதியினரில் பெரும்பாலும் பெண்களே கருத்தடை அறுவை சிகி

Updated On : 4 ஜூலை 2019, 6:03 pm IST
பகிர்:

கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வது மற்றும் ஆணுறை பயன்பாட்டில் இன்றளவும் இந்திய ஆண்களிடையே மூட நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. அதன் காரணமாகவே தம்பதியினரில் பெரும்பாலும் பெண்களே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிலை நெடுங்காலமாக இங்கு நீடித்து வருகிறது. விதிவிலக்காக சில குடும்பங்களில் கருத்தடை அறுவை சிகிச்சைகளை ஆண்களும் செய்து கொள்ளலாம் எனும் தெளிவு இருந்தாலும் கூட அப்படியான சிகிச்சைகளுக்கு உட்படும் ஆண்களின் எண்ணிக்கை என்பது பெண்களோடு ஒப்பிடும் போது குறைவாகவே இருந்து வருகிறது.

புதன்கிழமை மாநிலங்களவையில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி செளபே இது குறித்துப் பேசுகையில், குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை மற்றும் ஆணுறை பயன்பாட்டு விஷயத்தில் யூனியன் பிரதேசங்கள் உட்பட நாடு முழுவதிலுமாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் சண்டிகர் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். அங்கு ஆண்களில் 28.6% பேர் கருத்தடை அறுவை சிகிச்சைகளை தங்களது மனைவிகளுக்குப் பதிலாக தாங்களே மேற்கொண்டு கருத்துக் கணிப்பில் முதலிடம் பெற்றிருப்பதை தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு - 4 ந் அடிப்படையில் சுட்டிக்காட்டினார். 

இந்தப் பட்டியலில் சண்டிகரைத் தொடர்ந்து டெல்லி (20.2), பஞ்சாப்(19.5), உத்தரகாண்ட்(16.8) மாநிலங்கள் அடுத்தடுத்த இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் கடைசி இடம் பெற்றுள்ள மாநிலங்கள் எவையெவை என்று தெரிந்து கொள்வோமா?
ஆந்திரப் பிரதேசம்(0.8%), தமிழ்நாடு(0.9%), பிகார்(1.1%) மூன்று மாநிலங்களும் கடைசி இடத்தில் இருக்கின்றன.
இந்த பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் நாடு முழுவதிலுமாக ஆண்கள் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும், கருத்தடை அறுவை சிகிச்சைமுறைகள் மற்றும் ஆணுறைகளையும் பயன்படுத்துவதற்கான தேசிய சராசரி சதவிகிதம் 5.9% இருந்தது என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Related Article

வால்நட்டில் போதை மருந்து கடத்திய பெண்! கடத்தல்காரர்கள் 8 அடி பாய்ந்தால் கஸ்டம்ஸ்காரர்கள் 16 அடி பாய்ந்தாக வேண்டிய நிர்பந்தம்!

ஒட்டகச் சிவிங்கிக்கு பிரசவம் பார்க்கறதுன்னா சும்மாவா? குட்டி 5 அடி உயரம், 30 கிலோ எடையாக்கும்!

அதிர்ச்சியில் உறைய வைக்கும் சால்வடார் புகைப்படம்... புதைந்து போன அப்பா, மகளின் அமெரிக்க கனவுகள்!

‘ட்ரிமேன் சிண்ட்ரோம்’ வலி தாங்க முடியவில்லை என் கைகளை வெட்டி விடுங்கள் எனக் கதறும் வங்க தேசத்து இளைஞர்!

கல்யாணத்துக்கு மட்டும் தான் அனுமதி குப்பைக்கு இல்லை... கட்டுங்க ஃபைன்! குப்தா ஃபேமிலியிடம் கறார் காட்டிய உத்தரகாண்ட் முனிசிபாலிட்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments