தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல் காந்தி வருவார்! - கிரிஷ் சோடங்கர்
தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் காந்தி தமிழ்நாடு வருவார் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளதைப் பற்றி...
தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் காந்தி தமிழ்நாடு வருவார் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்தேர்தல் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Advertisement
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை தமிழ்நாடு வராத மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி பல்வேறு விமர்சனத்துக்குள்ளானார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி விரைவில் தமிழ்நாடு வரவுள்ளதாக தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தமிழகத் தேர்தலுக்காகப் பிரசாரம் செய்ய வருவார். எங்கள் கட்சியின் தலைவர்கள் அனைவரும் தமிழ்நாடு வருவார்கள்.
பிரசாரம் தீவிரமடையும் போது எங்கள் தலைவர்கள் பிரசாரத்தைத் தொடங்குவார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு உதவும் வகையில் 234 தொகுதிகளிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.