விண்ணப்பித்துவிட்டீர்களா..? நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலர் வேலை!
மும்பையில் செயல்பட்டு வரும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 170 அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மும்பையில் செயல்பட்டு வரும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 170 அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Officers (Generalists & Specialists) (Scale-I)
காலியிடங்கள்: 170
Advertisement
Advertisement
துறைவாரியான காலியிடங்கள்:
1. Accounts - 50
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் சிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல் பிரிவில் எம்பிஏ., எம்.காம் முடித்திருக்க வேண்டும்.
2. Generalists - 120
தகுதி: ஏதாவதொரு துரையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,925 - 96,765
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். முதற்கட்டத் தேர்வு அக்டோர் 13 ஆம் தேதி நடைபெறும்.
தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலீர், நாகர்கோவில்.முதன்மைத் தேர்வு நவம்பர் 17 ஆம் தேதி சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100, இதர அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.10.2024
மேலும் விவரங்கள் அறிய https://www.newindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.