FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் மேலாளர் பணி: 26-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளர்(ரீட்டேல் திட்டங்கள்) பணிக்கான வேலைவாய்ப்பு

Updated On : 21 மார்ச் 2025, 2:45 pm IST
பகிர்:

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளர்(ரீட்டேல் திட்டங்கள்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager (Retail Products)

காலியிடங்கள்: 3+1

Advertisement

Advertisement

தகுதி: எம்பிஏ, மேலாண்மை பிரிவில் முதுகலை டிப்ளமோ, மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தயாரிப்பு மேம்பாடு, தயாரிப்பு மேலாண்மை, டிஜிட்டல் புதுமை, வணிக உத்தி, சந்தைப்படுத்துதலில் திறன், சிறந்த தகவல் தொடர்பு மற்றும் தலைமைத்துவத் திறன் உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.85,920 - 1,05,280

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 28 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.3.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments