இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்திக் கழகத்தில்(என்பிசிஐஎல்) நிரப்பப்பட உள்ள 330 டிரெய்னி பணியிடங்கள் குறித்து...
மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்திக் கழகத்தில்(என்பிசிஐஎல்) நிரப்பப்பட உள்ள 330 டிரெய்னி பணியிடங்களுக்கான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NPCIL/HQ/HRM/ET/2026/02
பணி: Executive Trainee(GATE-2026)
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 330
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanical - 125
2. Chemical - 40
3. Electrical - 65
4. Electronics - 50
5. Instrumentation - 15
6. Civil - 35
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.4.2026 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: 2024, 2025, 2026 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கேட் தேர்வுகள் ஏதாவதொன்றில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினருக்கும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.careers.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2026
விண்ணப்பிப்போரின் இதர விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
NPCIL Announcement to induct Executive Trainees in Mechanical, Chemical, Electrical, Electronics, Instrumentation & Civil disciplines by shortlisting candidates based on GATE Scores.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.