அரசுப் பணிகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்எஸ்சி அறிவித்துள்ள சூப்பர் வேலைவாய்ப்பு! 

தினமணி


மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள முதுநிலை டெக்னிக்கல் உதவியாளர், இந்தி தட்டச்சர், டெக்னீசியன், நூலகர் என 5,369 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: Senior Technical Assistant, Hindi Typist, Investigator Grade-II, Technician, Librarian & others

காலியிடங்கள்: 5369

தகுதி: மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.1.2023 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தினார்.
 
விண்ணப்பிக்கும் முறை:  https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.3.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: ஸ்ரீநகரில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வாக்குப்பதிவு

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஒரு முகமோ..இரு முகமோ..! சாந்தனு

தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தாயகம் திரும்பிய இங்கிலாந்து வீரர்கள்!

SCROLL FOR NEXT