சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சி இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். சிங்கம் ஒருபுறமும் மற்றொருபுறம் சிங்கப் பெண் என்பதைக் குறிக்கும் வகையில் தொப்பி அணிந்தவாறு பெண் காவலரும் இடம்பெற்றுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை அளித்தனர். - R Senthilkumarஇலச்சினையில் சிங்கம் ஒருபுறமும் மற்றொருபுறம் சிங்கப் பெண் என்பதைக் குறிக்கும் வகையில் தொப்பி அணிந்தவாறு பெண் காவலரும் இடம்பெற்றுள்ளார். விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையின் திட்ட இலச்சினையை முதல்வர் விஜய் வெளியிட்டார்.
Advertisement
Advertisement
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண் காவலர்கள், அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.விழாவில் முதல்வருக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.பெண்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குவதற்காக, 'சிங்கப்பன்' என்ற சிறப்பு காவல் பிரிவின் தொடக்க விழாவின் போது, தமிழக முதல்வர் விஜய் உடன் உறையாடிய மாநில டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றிய தமிழக முதல்வர் விஜய்.சிங்கப்பெண் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி, காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் சிங்கப் பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.