ஞாபக சக்தி திறனை அதிகரிக்க உதவும் அற்புத ஆற்றல் மிக்க ஜூஸ்
வல்லாரைக் கீரையை நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி
வல்லாரைக் கீரை ஜூஸ்
தேவையான பொருட்கள்
வல்லாரைக் கீரை - 50 கிராம்
ரோஜா இதழ்கள் - ஒரு கைப்பிடி
அமுக்கரா பொடி - கால் தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
தேன் - தேவையான அளவு
Advertisement
Advertisement
செய்முறை : வல்லாரைக் கீரையை நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து பருகவும்.
பயன்கள் : இந்த ஜூஸை குடித்து வந்தால் உடலில் உண்டாகும் கொழுப்பு கட்டிகளை கரைக்கும். சிந்தனை, அறிவுத் திறன் மற்றும் ஞாபக சக்தி மேலோங்கும். ரத்த அழுத்தத்தை சமன்படுத்தும், நல்ல சுறுப்பை உண்டாகும் ஆற்றல் மிக்க அற்புதமான ஜூஸ்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.