கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: சுஷ்மா சுவராஜ்
கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கத்தார் உடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைருவமான மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில், கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், கத்தாரில் தமிழர்கள் உட்பட ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.