வருமான வரி தாக்கல், பான் கார்டுக்கு ஆதாரை கட்டாயமாக்க நடவடிக்கை
வருமான வரி கணக்குத் தாக்கல், பான் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, நிதி மசோதாவில் திருத்தம் கொண்டு
வருமான வரி கணக்குத் தாக்கல், பான் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, நிதி மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சமீபத்தில் வருமான வரித் துறை சார்பில் செல்லிடப்பேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவும், வரிப்பிடித்தம் எவ்வளவு திரும்பி வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று கூறப்பட்டது. அப்போதே, எதிர்காலத்தில் ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு பான் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இப்போது ஆண்டுதோறும் சராசரியாக 2.5 கோடி பேர் பான் கார்டு பெற விண்ணப்பித்து வருகின்றனர். நாட்டில் 25 கோடிக்கும் மேற்பட்டோர் பான் கார்டு வைத்துள்ளனர்.
111 கோடி பேருக்கு ஆதார் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. புதிய சிம் கார்டு வாங்குதல், வங்கிக் கணக்குத் தொடங்குதல், பல்வேறு வகை மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதார் அடிப்படையிலான மின்னணுப் பணவர்த்தனையை அதிகரிக்கும் முயற்சியையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.