முகப்பு
இந்தியா

தில்லியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டம்! 

வரும் திங்களன்று மீண்டும் துவங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம், தில்லியில் சோனியா காந்தி தலைமையில்.. 

Updated On : 1 பிப்ரவரி, 2018 at 6:37 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:38 PM

புதுதில்லி: வரும் திங்களன்று மீண்டும் துவங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம், தில்லியில் சோனியா காந்தி தலைமையில் துவங்கியது. 

வியாழன் அன்று காலை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் இந்த கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம், தில்லியில் சோனியா காந்தி தலைமையில் துவங்கியது.  

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

முக்கியமான இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.