தில்லியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டம்!
வரும் திங்களன்று மீண்டும் துவங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம், தில்லியில் சோனியா காந்தி தலைமையில்..
புதுதில்லி: வரும் திங்களன்று மீண்டும் துவங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம், தில்லியில் சோனியா காந்தி தலைமையில் துவங்கியது.
வியாழன் அன்று காலை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் இந்த கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம், தில்லியில் சோனியா காந்தி தலைமையில் துவங்கியது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
முக்கியமான இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.