FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல்: ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழாக சரிவு 

ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல்: ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழாக சரிவடைந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 1 ஜூலை 2019, 6:37 pm IST
பகிர்:

புது தில்லி: ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல்: ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழாக சரிவடைந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டில் முன்பு நிலவி வந்த பல்வேறு வரி விதிப்பு முறைகளுக்கு மாற்றாக ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதுமுதல் கணிசமான அளவில் வரிவசூலில் ஏற்றம் காணப்படுகிறது  

இந்நிலையில் ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழாக சரிவடைந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 289 கோடி ரூபாய் கிடைத்த நிலையில் ஜூன் மாதத்தில் 99 ஆயிரத்து 939 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதன்மூலம் முந்தைய மாதத்தில் கிடைத்ததைவிட 350 கோடி ரூபாய் குறைவாக உள்ளது.

இந்த 99 ஆயிரத்து 939 கோடி ரூபாயில் மத்திய அரசுக்கு சேர வேண்டிய வரியாக 18,366 கோடி ரூபாயும் மாநில அரசுகளுக்கு சேர வேண்டிய வரியாக 18,366 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்த வரியாக (இறக்குமதி வரிகள் 21,980 கோடி ரூபாய் உள்பட) 47,772 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.

அதேபோல செஸ் வரியாக  8,457 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments