FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மோடி பங்கேற்க உள்ள பேரணிக்கு எதிராக காங்., தேர்தல் ஆணையத்தில் புகார்: காரணம் என்ன தெரியுமா? 

மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள தேர்தல் பேரணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

Updated On : 1 மே 2019, 5:51 pm IST
பகிர்:

புது தில்லி: மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள தேர்தல் பேரணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பேரணியில் பிரதர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். அங்குள்ள கஜ்லிவான் மைதானத்தில் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த பேரணி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள தேர்தல் பேரணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சித் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலின் ஒரு பகுதியாக வரும் 6-ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் தாமோ பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடமானது பிரதமர் மோடியின் தேர்தல் பேரணி நடைபெற உள்ள சாகர் மாவட்டத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

அத்துடன் சாகர் மாவட்டத்தின் பண்டா, ரெஹ்லி மற்றும் தியோரி ஆகிய மூன்று தாலுக்காக்களும், தாமோ பாராளுமன்றத் தொகுதிக்கு கீழ்தான் வருகிறது. 

எனவே மோடியின் பிரசாரமானது கண்டிப்பாக அங்கு நடைபெறும் வாக்குப்பதிவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியானது மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஏப்ரல் 30-ஆம் தேதியன்று தகவல் தெரிவித்துள்ளது.

அத்துடன் பிரதமர் எஸ்.பி,ஜி சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் காவலுக்கு கீழ் வருகிறவர் என்பதால் அவரது வருகையின் போது, அதிக அளவில் காவலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இதுவும் வாக்குபதிவின்போது சிக்கலை ஏற்படுத்தும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments