FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்பு

வட இந்திய பெருங்கடலில் 3 புயல்கள் உருவாவது குறித்து...

14 செப்டம்பர் 2026, 7:47 am IST
- பிரதிப் படம்
பகிர்:

வருகிற அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்துக்குள் வட இந்திய பெருங்கடல் பகுதியில் 3 புயல்கள் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வட இந்திய பெருங்கடல் பகுதியில் 2026 அக்டோபர் முதல் டிசம்பரில் 3 உயர் தீவிர வெப்பமண்டல புயல்கள் தாக்கக்கூடும் என இஸ்ரோ எச்சரித்துள்ளது.

இதனால், வடகிழக்கு பருவமழை காலமான இக்காலகட்டத்தில் 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயலின் தாக்கம் 83 சதவிகிதம் தீவிரமாக இருக்கும். இந்தக் கணிப்புகளை ஆராய்வதற்காக, இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் 40 ஆண்டுகால கடலியல் மற்றும் வளிமண்டலத் தரவுகளை மதிப்பீடு செய்துள்ளனர். இந்த புயல் தீவிரமானது, கோடைப் பருவமழை ஏமாற்றத்தால் ஏற்பட்ட அசாதாரணமான கொந்தளிப்பான கடல் சூழலை எடுத்துக்காட்டுகிறது.

Advertisement

Advertisement

புயலின் தீவிரத்தால், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரப் பகுதிகளில் உள்ள பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு உடனடி எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாதிக்கப்படக்கூடிய கடற்கரையை ஒட்டி வசிக்கும் மக்களைப் பாதுகாக்கவும், கடல்சார் சொத்துக்களைப் பத்திரப்படுத்தவும், அச்சுறுத்தலுக்கு உள்ளான கடல்சார் மண்டலங்களில் மீன்பிடித் தடைகளை அமல்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

ISRO Warns Of Severe Storm Risk In Indian Ocean This Year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments