FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமிதாப் பச்சனின் வீடு, ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...மும்பையில் பரபரப்பு

மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கும் ரயில் நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 7 ஆகஸ்ட் 2021, 3:05 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கும் ரயில் நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள நான்கு இடங்களுக்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு இருவரை இன்று (சனிக்கிழமை) கைது செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "நடிகர் அமிதாப் பச்சனின் பங்களா, மூன்று ரயில் நிலையங்களுக்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். 

Advertisement

Advertisement

பின்னர், பொய்யான வெடு குண்டு மிரட்டல் என தெரியவந்தது. இது தொடர்பாக மும்பை காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவு இருவரை கைது செய்துள்ளது. நேற்று இரவு காவல்துறைக்கு வந்த பொய்யான வெடி குண்டு மிரட்டல் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாதர், பைக்குல்லா, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்கள், அமிதா பச்சனின் வீடு ஆகியவற்றில் வெடி குண்டு வைக்கப்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் தெரிவித்தார்.

இதையடுத்து, மும்பை காவல்துறை, ரயில்வே காவல்துறை, வெடி குண்டு நிபுணர்கள் ஆகியோர் அந்த நான்கு இடங்களுக்கு சென்று சோதனை நடத்தியதில் அது பொய்யான தகவல் என தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments