FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உபியில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவகாரம்: அமித்ஷாவை சந்திக்கும் பஞ்சாப் முதல்வர்

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை பஞ்சாப் முதல்வர் சன்னி செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சந்திக்கிறார்.

Updated On : 5 அக்டோபர் 2021, 4:47 pm IST
பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி (கோப்புப்படம்)
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை பஞ்சாப் முதல்வர் சன்னி செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சந்திக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்தில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள்  மீது பாஜகவினர் வாகனங்களை ஏற்றியதாகக் கூறி இருதரப்பினரிடையேயான மோதலில் 9 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இதற்காக தில்லி சென்றுள்ள அவர் மாலை மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும். இதுபோன்ற (லக்கிம்பூர் கெரி) சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இன்றைய கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம்  இந்த பிரச்னையை குறித்து விவாதிப்பேன் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments