முகப்பு
இந்தியா

'காங்கிரஸ் தலைமை ஒருபோதும் கற்றுக்கொள்ளாது' - அமரீந்தர் சிங் கருத்து

காங்கிரஸ் தலைமை ஒருபோதும் கற்றுக்கொள்ளாது என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

Updated On : 11 மார்ச் 2022, 1:29 pm IST
பகிர்:

காங்கிரஸ் தலைமை ஒருபோதும் கற்றுக்கொள்ளாது என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறித்து பஞ்சாப் முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் முன்னாள் மூத்தத் தலைவருமான அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'காங்கிரஸ் தலைமை ஒருபோதும் கற்றுக்கொள்ளாது!

Advertisement

Advertisement

உ.பி.யில் காங்கிரஸின் அவமானகரமான தோல்விக்கு யார் காரணம்? மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் முடிவுகள் என்ன ஆயிற்று?

இதற்கான பதில் சுவரில் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள்(காங்கிரஸ்) அதனை ஒருபோதும் படிப்பதில்லை என்றே நான் கருதுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

அமரீந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதுபோல, அமரீந்தர் சிங், தான் போட்டியிட்ட பாட்டியாலா தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளார். பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாபில் 117ல் 92 இடங்களைப் பிடித்து ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது கட்சியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments