FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இடைத்தேர்தல் அனைத்திலும் பாஜகவுக்கு பின்னடைவு: மாநில கட்சிகள் ஆதிக்கம்!

ஒரு மக்களவை மற்றும் 6 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அனைத்திலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

Updated On : 8 டிசம்பர் 2022, 12:40 pm IST
பகிர்:

ஒரு மக்களவை மற்றும் 6 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அனைத்திலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

குஜராத், ஹிமாசலப் பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல்கள், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவை மற்றும் 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல்கள் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. குஜராத்தில் பாஜகவும், ஹிமாசலில் காங்கிரஸும் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மருமகளும், கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளரைவிட 1.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

சட்டப்பேரவை இடைத்தேர்தல்

  1.     ராம்பூா், உத்தரப்பிரதேசம் - சமாஜவாதி முன்னிலை
  2.     கடோலி, உத்தரப்பிரதேசம் - ராஷ்டிரிய லோக் தளம் முன்னிலை
  3.     பதாம்பூா், ஒடிஸா - பிஜு ஜனதா தளம் முன்னிலை
  4.     சா்தாா்சாஹா், ராஜஸ்தான் - காங்கிரஸ் முன்னிலை
  5.     குா்ஹனி, பிகார் - ஐக்கிய ஜனதா தளம் முன்னிலை
  6.     பானுபிரதாபூா், சத்தீஸ்கர் - காங்கிரஸ் முன்னிலை

முன்னதாக நேற்று எண்ணப்பட்ட தில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மியிடம் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக இழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments