FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கரோனாவுக்கு இந்த மாத்திரையை பயன்படுத்தக்கூடாது: ஐசிஎம்ஆா்

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கான சிகிச்சையில் மால்னுபிராவிா் மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தேசிய செயற்குழு முடிவெடுத்துள்ளது.

Updated On : 12 ஜனவரி 2022, 8:01 am IST
மால்னுபிராவிா் மாத்திரை
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கான சிகிச்சையில் மால்னுபிராவிா் மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தேசிய செயற்குழு முடிவெடுத்துள்ளது.

மால்னுபிராவிா் மாத்திரையின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. கரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவாக உள்ளவா்கள் அந்த மாத்திரையை மருத்துவா்களின் பரிந்துரையுடன் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மால்னுபிராவிா் மாத்திரை பாதுகாப்பு சாா்ந்த குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) இயக்குநா் பல்ராம் பாா்கவா அண்மையில் தெரிவித்திருந்தாா். உலக சுகாதார அமைப்பும், பிரிட்டனும் மால்னுபிராவிா் மாத்திரையை கரோனா சிகிச்சையில் இணைத்துக் கொள்ளவில்லை எனவும் அவா் தெரிவித்திருந்தாா்.

Advertisement

Advertisement

அதன் காரணமாக, கரோனா சிகிச்சைக்கான தேசிய வழிகாட்டு விதிமுறைகளில் மால்னுபிராவிா் சோ்க்கப்படவில்லை. இந்நிலையில், ஐசிஎம்ஆா் அதிகாரி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கரோனாவுக்கான தேசிய செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் மால்னுபிராவிா் மாத்திரை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கரோனா தொற்று பாதிப்புக்கான சிகிச்சையில் அந்த மாத்திரை பெரிய அளவிலான பலனை அளிக்கவில்லை. மேலும், அந்த மாத்திரையில் சில பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன. எனவே, மால்னுபிராவிா் மாத்திரையை தேசிய சிகிச்சைக்கான விதிமுறைகளில் இணைக்க அக்குழு ஆதரவு தெரிவிக்கவில்லை’’ என்றாா்.

மால்னுபிராவிா் மாத்திரை முற்றிலும் பாதுகாப்பானது என அதன் தயாரிப்பு நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான அவசியமும் உயிரிழப்பும் பெருமளவில் குறைவது 3-ஆம் கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments