முகப்பு
இந்தியா

ஹிமாசலின் சிறப்பு அந்தஸ்தை காங்கிரஸ் பறித்தது: ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் ஆட்சியில் ஹிமாசலப் பிரதேசம் தனது சிறப்பு அந்தஸ்தை இழந்ததாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். 

Updated On : 2 நவம்பர் 2022, 4:30 pm IST
ஜெ.பி.நட்டா (கோப்புப் படம்)
பகிர்:


காங்கிரஸ் ஆட்சியில் ஹிமாசலப் பிரதேசம் தனது சிறப்பு அந்தஸ்தை இழந்ததாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். 

ஹிமாசலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் மந்திரிகாட் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய ஜெ.பி.நட்டா,

ஹிமாசல் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி நீக்கிவிட்டது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு ஹிமாசலுக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது. ஹிமாசலை லே மற்றும் லடாக் பகுதியுடன் இணைக்கும் அடல் சுரங்கப் பாதை தொடங்கியதும், கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் எனக் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

ஹிமாசலப் பிரதேசத்திற்கு நவம்பா் 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் முடிவுகள் டிச.8-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 
 
மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 413 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தற்போது ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 

நடபெறவுள்ள தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிவரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சியும் போட்டியில் களமிறங்கியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments