FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாஜக மற்றும் மாநிலக் கட்சிகளிடம் ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை? - ராகுல் காந்தி

பாஜக மற்றும் மாநிலக் கட்சிகள் தங்கள் கட்சித் தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தாதது ஏன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

Updated On : 19 அக்டோபர் 2022, 4:05 pm IST
பகிர்:

பாஜக மற்றும் மாநில கட்சிகளிடம் உள்கட்சித் தேர்தல் குறித்து ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை நடைப்பயணம்  மேற்கொண்டு வருகிறார். நேற்று ஆந்திரம் சென்றுள்ள அவர், காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களுடன் நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

ஆந்திர மாநிலம் அடோனியில் இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, 'நாட்டில் கட்சிக்குள் தேர்தல் நடத்தும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். இதற்கென தேர்தல் ஆணையம் கொண்டுள்ள ஒரே அரசியல் கட்சியும்தான். மிகவும் வெளிப்படையாகவே தேர்தல் நடத்துகிறோம். ஆனால், காங்கிரஸ் தேர்தல் குறித்து எல்லாரும் கேள்வி கேட்கிறார்கள். வெளிப்படையான தேர்தல் நடத்திய காங்கிரஸ் கட்சி குறித்து பெருமைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சியிடமே தொடர்ந்து கேள்வி முன்வைக்கப்படுகிறது. தேர்தல் நடத்தாத பாஜக மற்றும் மாநில கட்சிகளிடம் ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை'  என்று பேசினார்.

மேலும், 'கட்சியில் தனக்கு என்ன பதவி என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே முடிவு செய்வார். காங்கிரஸ் தலைவரின் பங்கு குறித்து அவர் தான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். அவரே அனைத்து முடிவுகளையும் எடுப்பார்' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments