முகப்பு
இந்தியா

விசாகப்பட்டினத்தில் லாரி மோதி 8 குழந்தைகள் படுகாயம்

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் 8 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

Updated On : 22 நவம்பர் 2023, 2:50 pm IST
பகிர்:

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் 8 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள பெத்தானி பள்ளியில் படிக்கும் 8 குழந்தைகளை இன்று (நவம்பர் 22) காலை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ சங்கம் சரத் தியேட்டர் அருகே செல்லும்போது லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டது. 

இதுகுறித்து பேசிய காவல் துணை ஆணையாளர் சீனிவாச ராவ், “இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 8 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேருக்கு பெரிய அளவில் காயமின்றி தப்பினர். 3 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். ஒரு பெண் குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.” என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ லாரி வருவதைக் கவனிக்காமல் வேகமாகச் சென்று லாரியின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறது. இந்த சிசிடிவி காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments