வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை அதிகரிப்பு!
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.8 அதிகரித்துள்ளது.
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.8 அதிகரித்துள்ளது.
சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.8 அதிகரித்து, சனிக்கிழமை முதல் (ஜூலை 1) ரூ.1,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | அனந்தபுரி, திருநெல்வேலி ரயில்களின் நேரம் மாற்றம்
அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை தொடா்ந்து குறைந்து வந்த நிலையில், இந்த மாதம் சற்று அதிகரித்துள்ளது.
இதன் தொடா்ச்சியாக சென்னையில் சனிக்கிழமை வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ரூ.8 அதிகரித்து, ரூ.1,945-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மே மாதம் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.171 குறைக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் ரூ.84.50 குறைக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் ரூ.8 அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.