FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்ட்ரல் -பித்ரகுண்டா ரயில் இன்று முதல் ரத்து

சென்னை சென்ட்ரலிலிருந்து ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில், பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

6 பிப்ரவரி 2024, 6:32 pm IST
பகிர்:

சென்னை சென்ட்ரலிலிருந்து ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில், பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும் விரைவு ரயில் (எண்: 17237) மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில் (எண்: 17238) ஆகியவை திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் ஜூலை 14 -ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பாதை மாற்றம்: ஜாா்கண்ட் மாநிலம் ஹாட்டியாவிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக ஜூலை 11, 15 ஆகிய தேதிகளில் பெங்களூரு செல்லும் விரைவு ரயில்கள் (எண்கள்: 12835, 18637) ஆந்திர மாநிலம் நிடடவோலே, பீமாவரம் நகரம், குடிவாடா மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும்.

அதேபோல், ஜாா்க்கண்ட் மாநிலம் டாடாநகரிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 12889) நிடடவோலு, பீமாவரம் நகரம், குடிவாடா மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments