FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஒடிசா விபத்து: 95 ரயில்கள் ரத்து; மாற்று வழியில் 45 ரயில்கள்!

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்து காரணமாக தென்கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் 95 ரயில்களின் பயணம் இன்று (ஜூன் 4) ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 4 ஜூன் 2023, 9:51 am IST
பகிர்:

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்து காரணமாக தென்கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் 95 ரயில்களின் பயணம் இன்று (ஜூன் 4) ரத்து செய்யப்பட்டுள்ளது.

95 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 45 ரயில்கள்  மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்திலுள்ள  பஜாா் ரயில் நிலையம் மூன்று ரயில்கள் ஜூன் 2ஆம் தேதி ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானது. 

Advertisement

Advertisement

ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடனும், பெங்களூரு-ஹெளரால் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன. 

அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது. 

3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 290-ஆக அதிகரித்துள்ளது. 

பாலாசோர் வழித்தடத்தில் ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள், 7 பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து மீட்பு ரயில், 4 ரயில்வே கிரேன்கள் ஆகியவைகொண்டு சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  

சீரமைப்புப் பணிகள் காரணமாக தென்கிழக்கு பிராந்தியத்தில் 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 45 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments