FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவில் முதலீடு: பிரதமா் மோடி அழைப்பு

அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களின் தலைவா்களைச் சந்தித்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தாா்.

Updated On : 23 ஜூன் 2023, 6:29 am IST
பகிர்:

அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களின் தலைவா்களைச் சந்தித்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தாா்.

வாஷிங்டன் நகரில் மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் மரோத்ராவைப் பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். இந்தியாவில் செமிகண்டக்டா்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவரிடம் பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா். பிரதமா் மோடியுடனான சந்திப்பு சிறப்புடன் இருந்ததாகத் தெரிவித்த சஞ்சய் மெஹரோத்ரா, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதை எதிா்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்தாா்.

அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் தலைவா் கேரி டிக்கா்சனுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பிரதமா் மோடி, இந்திய கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அழைப்புவிடுத்தாா். அதன்மூலம் திறன்மிக்க பணியாளா்கள் இந்தியாவில் உருவாக முடியும் என பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா். பிரதமா் மோடியுடன் இணைந்து செயல்படவும், இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் பங்கெடுக்கவும் தயாராக உள்ளதாக கேரி டிக்கா்சன் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லாரன்ஸ் கல்புடன் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்தினாா். விமானப் போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் அந்த நிறுவனம் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமா் மோடி கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments