பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் யோகி!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை(நாளை) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை(நாளை) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது முதல்வர் யோகியுடன், எரிசக்தி துறை அமைச்சர் ஏ.கே சர்மாவும் கலந்துகொள்கிறார். முதல்வர் - பிரதமர் இடையேயான இந்த சந்திப்பில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் கோயில் திறப்பு விழா அடுத்தாண்டு தொடக்கத்தில் நடக்க வாய்ப்புள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
Advertisement
Advertisement
முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் முதல்வர் யோகி உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்திற்குச் சென்று ராமஜென்ம பூமியில் கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.