மாண்டியா தொகுதியில் குமாரசாமி வேட்புமனு தாக்கல்!
மாண்டியா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாண்டியா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
கர்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறதா. பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதி மற்றும் மே 7-ம் தேதி என இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவே கெளடா தலைமையிலான ஜேடிஎஸ் கடந்தாண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மாண்டியா தொகுதியில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன் பாஜக மூத்த தலைவர் பி.எஸ். எடியூரப்பா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.