முகப்பு
இந்தியா

மாநிலங்களவையில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு!

காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2024, 3:20 pm IST
மாநிலங்களவை (கோப்புப்படம்) - DIN
பகிர்:

மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு வருகிற செப். 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, அசாம், பிகார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களுக்கும், ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 9 மாநிலங்களில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஆக. 14 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக. 21.

Advertisement

Advertisement

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் -அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், திரிபுரா மாநிலங்களுக்கு ஆக. 26 எனவும், பிகார், ஹரியாணா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆக. 27 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு செப். 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை அன்றைய தினமே மாலை 5 மணிக்கு நடைபெறும்.

மாநிலங்களவையில் எம்.பி.க்களாக இருந்த சிலர் மக்களவைக்குத் தேர்வான நிலையில் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments