மாநிலங்களவை (கோப்புப்படம்) DIN
இந்தியா

மாநிலங்களவையில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு!

காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு வருகிற செப். 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, அசாம், பிகார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களுக்கும், ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 9 மாநிலங்களில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஆக. 14 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக. 21.

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் -அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், திரிபுரா மாநிலங்களுக்கு ஆக. 26 எனவும், பிகார், ஹரியாணா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆக. 27 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு செப். 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை அன்றைய தினமே மாலை 5 மணிக்கு நடைபெறும்.

மாநிலங்களவையில் எம்.பி.க்களாக இருந்த சிலர் மக்களவைக்குத் தேர்வான நிலையில் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

SCROLL FOR NEXT