FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிஎஸ்எஃப் தொடக்க தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தினத்தையொட்டி, அப்படையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

Updated On : 2 டிசம்பர் 2024, 4:12 am IST
பிஎஸ்எஃப் தொடக்க தினம்
பகிர்:

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தினத்தையொட்டி, அப்படையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படை தொடங்கப்பட்ட தினம் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பிஎஸ்எஃப் தொடக்க தினத்தில், அப்படையினருக்கு வாழ்த்துகள். தைரியம் மற்றும் அா்ப்பணிப்புடன் எல்லையை பாதுகாக்க பிஎஸ்எஃப் வீரா்கள் அயராது சேவையாற்றுகின்றனா். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் விழிப்பும், துணிவுமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. தேச பாதுகாப்பில் பிஎஸ்எஃப் முக்கிய அங்கம் வகிக்கிறது என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

சுமாா் 2.70 லட்சம் வீரா்களைக் கொண்ட பிஎஸ்எஃப், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments