FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி.,யில் டபுள் டெக்கர் பேருந்து - டேங்கர் லாரி மோதல்: 8 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்தும், தண்ணீர் டேங்கர் லாரியும் மோதியதில் 8 பேர் பலியானார்கள்.

Updated On : 6 டிசம்பர் 2024, 5:10 pm IST
பகிர்:

உத்தர பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்தும், தண்ணீர் டேங்கர் லாரியும் மோதியதில் 8 பேர் பலியானார்கள்.

உத்தர பிரதேசம், லக்னௌவில் இருந்து தலைநகர் தில்லி நோக்கி டபுள் டெக்கர் பேருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டது. லக்னௌ-ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, தண்ணீர் டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்யைல் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

டிச.11, 12ல் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

உத்தர பிரதேசத்தில் ஐந்து மணி நேரத்தில் நடந்த இரண்டாவது பெரிய சாலை விபத்து இதுவாகும். முன்னதாக, சித்ரகூடில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

குடும்ப உறுப்பினரின் அஸ்தியை கரைத்துவிட்டு பிரயாக்ராஜில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது 11 பேரை ஏற்றிச் சென்ற வாகனம் டிரக் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments