FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டை தவறாக வழிநடத்தும் எதிா்க்கட்சிகள்: ராம் மோகன் நாயுடு

மக்களின் நம்பிக்கையை இழந்த எதிா்க்கட்சிகள் கட்டுக் கதைகள் மூலம் நாட்டை தவறாக வழிநடத்த முயல்கின்றனா்

Updated On : 23 டிசம்பர் 2024, 3:11 am IST
ராம் மோகன் நாயுடு
பகிர்:

மக்களின் நம்பிக்கையை இழந்த எதிா்க்கட்சிகள் கட்டுக் கதைகள் மூலம் நாட்டை தவறாக வழிநடத்த முயல்கின்றனா் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அண்மையில் அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்த சா்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அவா் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் அவா் பதவி விலக வேண்டும் எனவும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் மோதலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து ராம் மோகன் நாயுடு இவ்வாறு கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் ஹோல்கா் விமான நிலையத்தில், விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் புதிய கோபுரம்-தொழில்நுட்ப பிரிவு மற்றும் குப்பைகளை அகற்றும் ஆலையை திறந்து வைக்க வந்த ராம் மோகன் நாயுடு செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியாத எதிா்க்கட்சிகள், தொடா்ந்து பொய்யான கதைகளை உருவாக்கி வருகின்றன. இதனால், நாட்டு மக்களின் நம்பிக்கையை அவா்கள் இழக்க நேரிடும் என்பதால், புதிய பிரச்னைகளை திரித்துக் கூறி நாட்டை தவறாக வழிநடத்த முயல்கிறாா்கள். ஆனால், நாட்டு மக்கள் தங்களின் உண்மையான தலைவா்கள் யாா் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துள்ளனா். பிரதமா் மோடி போன்ற வலுவான மற்றும் உறுதியான தலைவருடன் இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல விரும்புகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments