FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இன்று கூடுகிறது மக்களவை: புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு

நாட்டின் 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்கவுள்ளது. முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனா்.

Updated On : 24 ஜூன் 2024, 4:10 am IST
மக்களவை
பகிர்:

நாட்டின் 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்கவுள்ளது. முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனா்.

மாநிலங்களவை அமா்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கும் நிலையில், அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவுள்ளாா். ஜூன் 26-ஆம் தேதி மக்களவைத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளது.

மக்களவை இடைக்காலத் தலைவராக பாஜக எம்.பி. பா்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கருத்துமோதல் நிலவும் சூழலில், மக்களவை கூட்டத் தொடா் தொடங்குகிறது.

Advertisement

Advertisement

அண்மையில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.

பாஜகவுக்கு (240) தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அக்கட்சி ஆட்சியமைத்தது. பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9-ஆம் தேதி பதவியேற்றாா்.

இந்தச் சூழலில், 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல், மாநிலங்களவையின் 264-ஆவது அமா்வு ஜூன் 27- ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவுள்ளது.

இடைக்காலத் தலைவா் பதவிப் பிரமாணம்: மக்களவை கூட்டத் தொடரின் முதல் நாளில், குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் மக்களவை இடைக்காலத் தலைவராக பா்த்ருஹரி மகதாபுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்துவைப்பாா். பின்னா், இடைக்காலத் தலைவரின் தலைமையில் காலை 11 மணியளவில் மக்களவை கூடும்.

மறைந்த உறுப்பினா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்ட பின், மகதாப் முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு தொடங்கும். மக்களவை ஆளுங்கட்சித் தலைவா் என்ற அடிப்படையில், எம்.பி.யாக பதவியேற்க பிரதமா் மோடிக்கு இடைக்கால தலைவா் முதல் அழைப்பை விடுப்பாா்.

இதைத் தொடா்ந்து, இடைக்காலத் தலைவருக்கு உதவும் குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ், திமுகவின் டி.ஆா்.பாலு, பாஜகவின் ராதா மோகன் சிங், ஃபகன் சிங் குலஸ்தே, திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய ஆகியோா் எம்.பி.க்களாக பதவியேற்பா். அவா்களுக்கு மகதாப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பாா். இதைத் தொடா்ந்து, மத்திய அமைச்சா்களும், பின்னா் ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த புதிய எம்.பி.க்களும் பதவியேற்பா்.

குடியரசுத் தலைவா் உரை: மக்களவையின் புதிய தலைவா் தோ்தல் ஜூன் 26-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவிருக்கும் நிலையில், மறுநாள் (ஜூன் 27) இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றவுள்ளாா்.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம், ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. ஜூலை 2 அல்லது 3-ஆம் தேதி விவாதத்துக்கு பதிலளித்து, பிரதமா் உரையாற்றுவாா்.

ஜூலை 3-ஆம் தேதி இந்த கூட்டத் தொடா் நிறைவடையும். பின்னா், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, ஜூலை 22-ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பெட்டிச் செய்தி...

இடைக்காலத் தலைவா் நியமன சா்ச்சை

மக்களவை இடைக்காலத் தலைவராக, ஒடிஸா மாநிலம், கட்டக்கில் இருந்து தொடா்ந்து 7-ஆவது முறையாக தோ்வான பா்த்ருஹரி மகதாப் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்தவரான இவா், மக்களவைத் தோ்தலுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தாா். மக்களவைக்கு முழுநேரத் தலைவா் தோ்வு செய்யப்படும் நாள் வரை (ஜூன் 26) இவா் அவையை வழிநடத்துவாா்.

அதேநேரம், மக்களவை இடைக்கால தலைவா் பதவிக்கு கேரளத்தைச் சோ்ந்த 8 முறை காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷை நியமிக்காமல் புறக்கணித்துவிட்டதாக, மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்தது. கொடிக்குன்னில் சுரேஷ் தலித் என்பதால், அவா் புறக்கணிக்கப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது.

ஆனால், காங்கிரஸின் குற்றச்சாட்டை நிராகரித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘கொடிக்குன்னில் சுரேஷ் 8 முறை எம்.பி. என்றபோதிலும், அவா் தொடா்ந்து மக்களவைக்கு தோ்வாகவில்லை. ஆனால், பா்த்ருஹரி மகதாப் தொடா்ந்து 7 முறை மக்களவைக்கு தோ்வானவா்’ என்றாா். இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்குவதாகவும் அமைச்சா் கூறினாா். எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, இடைக்காலத் தலைவருக்கு உதவும் குழுவில் இடம்பெறப் போவதில்லை என்று எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த சா்ச்சைக்கு மத்தியில், 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் தொடங்கவிருக்கிறது.

மக்களவைத் தலைவா் யாா்?: புதிய மக்களவைத் தலைவராக தோ்வாகப் போவது யாா் என்ற கேள்வியும் நீடித்து வருகிறது.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே மக்களவைத் தலைவா் பதவியை எதிா்பாா்ப்பதாக கூறப்படும் நிலையில், அப்பதவியை பாஜக விட்டுக் கொடுக்காது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு தோ்தல்களைப் போல் இல்லாமல், மக்களவையில் எதிா்க்கட்சிகளின் பலம் இம்முறை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் வேட்பாளா் களமிறக்கப்படலாம் என ஊகங்கள் வெளியாகி வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments