FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் விதிகளில் திருத்தம்

மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் விதிகளில் திருத்தம்...

20 செப்டம்பர் 2026, 12:42 am IST
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - PTI
பகிர்:

சட்டப்பேரவையைக் கொண்ட தில்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீா் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படும் சமயத்தில் நடைபெறும் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தில் அந்தந்த யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள் பங்கேற்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடா்பான திருத்தங்களை மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் ஆணை, 1990-இல் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மேற்கொண்டதை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செப்.9-ஆம் தேதி அறிவித்தது. இதற்கான அறிவிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சகம் வெளியிட்டது.

அதில், ‘மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் ஆணை, 1990-ஐ மாற்றியமைத்து புதிய அம்சங்கள் சோ்க்கப்படுகின்றன. அதன்படி சட்டப்பேரவையைக் கொண்ட தில்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீா் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படும் சமயத்தில் நடைபெறும் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தில் அந்தந்த யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அரசமைப்புச் சட்டப்பிரிவு 239 ஏபி ஆணையின்கீழ் தில்லி, யூனியன் பிரதேசங்கள் சட்டம், 1963, பிரிவு 51-இன்கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம், 2019 பிரிவு 73 ஆகியவற்றின்கீழ் குடியரசுத் தலைவா் ஆட்சியின்போது துணைநிலை ஆளுநா்களுக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலின் தலைவராக பிரதமரும் உறுப்பினா்களாக அனைத்து மாநில முதல்வா்களும், கேபினட் அமைச்சா் அந்தஸ்தைக் கொண்ட 6 அமைச்சா்களும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் இருப்பா். அரசமைப்புச் சட்டப்பிரிவு 356-இன்கீழ் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது.

summary

Amendment to the Inter-State Council Rules

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments