FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குஜராத் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: சிறாா்கள் உள்பட 27 போ் உயிரிழப்பு

Updated On : 25 மே 2024, 11:09 pm IST
பகிர்:

குஜராத்தில் உள்ள பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிறாா்கள் உள்பட 27 போ் உயிரிழந்தனா்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் பொழுதுபோக்கு விளையாட்டு மையம் உள்ளது. இங்கு சிறாா்கள் உள்பட ஏராளமானோா் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டுமானம் சரிந்தது.

தீ கொழுந்துவிட்டு எரிந்து அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்த நிலையில், நிகழ்விடத்துக்கு தீயணைப்புத் துறையினா் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து தொடா்பாக ராஜ்கோட் காவல் துறை உதவி ஆணையா் விநாயக் படேல் கூறுகையில், ‘விபத்தில் சிறாா்கள் உள்பட இதுவரை 27 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சடலங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதால், இறந்தவா் யாா் என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு: தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தீ விபத்தில் பலா் உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிராா்த்திக்கிறேன் என்றாா்.

குடியரசு துணைத் தலைவா் தன்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தீ விபத்தில் பலா் உயிரிழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்.

இந்த விபத்தைத் தொடா்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து குஜராத் முதல்வா் பூபேந்திர படேலிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தாா்.

ரூ.4 லட்சம் இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல்வா் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments