கோப்புப் படம் 
இந்தியா

பஜனைக் குழுவினர் வாகனம் மீது லாரி மோதி 6 பேர் பலி!

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி, மக்கள் சாலை மறியல்

DIN

ஒடிஸாவில் கோவிலுக்கு சென்று திரும்பிய பஜனைக் குழுவினர் பயணித்த வேன், லாரி மீது மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒடிஸாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கண்டகோடா, சமர்பிந்தா கிராமத்தினர் கோவிலில் பஜனை பாடிவிட்டு, வேனில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, லாரி ஒன்றின்மீது மோதியது.

இந்த விபத்தில், வேனில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலையில் இருந்த பனிமூட்டத்தின் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் வாட்டி வதைக்கும் குளிா்- வெப்பநிலை 3 டிகிரியாக குறைந்தது

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

SCROLL FOR NEXT