கோப்புப் படம் 
இந்தியா

பஜனைக் குழுவினர் வாகனம் மீது லாரி மோதி 6 பேர் பலி!

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி, மக்கள் சாலை மறியல்

DIN

ஒடிஸாவில் கோவிலுக்கு சென்று திரும்பிய பஜனைக் குழுவினர் பயணித்த வேன், லாரி மீது மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒடிஸாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கண்டகோடா, சமர்பிந்தா கிராமத்தினர் கோவிலில் பஜனை பாடிவிட்டு, வேனில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, லாரி ஒன்றின்மீது மோதியது.

இந்த விபத்தில், வேனில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலையில் இருந்த பனிமூட்டத்தின் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

மொராக்கோவில் வெடித்த ஜென் ஸி போராட்டம்! அரசுப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

ஹேக்கிங் என்பது என்ன? எப்படி நடக்கிறது?

மின்னும் ஒளி... ஐஸ்வர்யா மேனன்!

புன்னகைப் பூவே... ரெஜினா!

SCROLL FOR NEXT