சத்தீஸ்கர் முன்னாள் டிஜிபி மகன் தற்கொலை
சத்தீஸ்கர் முன்னாள் டிஜிபி மகன் துஷார் சுக்லா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் முன்னாள் டிஜிபி மகன் துஷார் சுக்லா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி சந்திர சேகர் பாண்டே கூறுகையில், "துஷார் சுக்லா என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாக ஹாசிரா மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
எங்களுக்கு இன்னும் உடற்கூராய்வு அறிக்கை வரவில்லை. இறந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த ஈரானின் ரகசிய ராணுவ தளங்கள்!
தற்கொலைக்கான முதன்மைக் காரணம் மன உளைச்சல் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் தற்கொலைக் குறிப்பு எதுவும் காவல்துறைக்கு இதுவரை கிடைக்கவில்லை.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தற்கொலை செய்துகொண்ட துஷார் சுக்லா, சத்தீஸ்கர் முன்னாள் டிஜிபி ஸ்ரீமோகன் சுக்லாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.