FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

யமுனை நதி நீரைப் பருகிய ஹரியாணா முதல்வர்!

மக்களிடையே அச்சத்தை விளைவிக்கும் கருத்துகளை கேஜரிவால் கூறிவருவதாக சைனி விமர்சனம்.

Updated On : 29 ஜனவரி 2025, 9:58 pm IST
யமுனை நதி நீரைப் பருகும் - ANI
பகிர்:

யமுனை நதியில் விஷம் கலந்திருப்பதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டிய நிலையில், அந்நதி நீரை ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி கையில் எடுத்துப் பருகினார்.

மேலும், மக்களிடையே அச்சத்தை விளைவிக்கும் வகையிலான கருத்துகளை கேஜரிவால் கூறிவருவதாகவும் சைனி விமர்சித்தார்.

தில்லிக்கு தண்ணீா் வழங்கும் யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

கேஜரிவாலின் இத்தகைய கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இக்கருத்தைக் கூறியதற்காக கேஜரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால் வழக்கு தொடுக்க நேரிடும் என ஹரியாணா அரசு எச்சரித்தது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரவிந்த் கேஜரிவால், ஹரியாணா மற்றும் தில்லி மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என பாஜக வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், ஹரியாணா மாநிலம் பல்லா கிராமம் அருகே யமுனை நதியின் நீரை முதல்வர் நயாப் சிங் சைனி கையில் எடுத்துப் பருகினார். கேஜரிவாலின் கருத்தை பொய்யாக்கும் நோக்கத்தில் அவர் இவ்வாறு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் சைனி பேசியதாவது,

‘’அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் கருத்துகளை அரவிந்த் கேஜரிவால் கூறுகிறார். அதனால் இன்று யமுனை நதியின் கிளையில் பாய்ந்தோடும் நீரைப் பருகினேன். ஹரியாணா அரசு யமுனை நதியில் விஷத்தை கலப்பதாக கேஜரிவால் கூறுகிறார். படுகொலைப் பற்றி பேசுகிறார். இப்பகுதியில் உள்ள நீரை பரிசோதித்துப் பார்த்ததில் விஷம் போன்ற ஏதும் கலக்கப்படவில்லை என நீர்வளத் துறை ஆணையம் கூறியுள்ளது. கேஜரிவாலின் குற்றச்சாட்டு ஹரியாணா மக்களை மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அவமதிப்பதைப்போன்று உள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | மகா கும்பமேளா: மௌனி அமாவாசை நாளில் 5.7 கோடி பேர் புனித நீராடல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments