FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பஹல்காம் தாக்குதல் முன்கூட்டியே தெரியுமா? பொறுப்பின்றி பேசுகிறார் கார்கே - பாஜக

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான கருத்துகளைக் கூறும் காங்., தலைவர்களின் பட்டியலில் கார்கேவும் இணைந்துள்ளதாக பாஜக விமர்சனம்.

Updated On : 6 மே 2025, 7:05 pm IST
பாஜக - கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பற்ற கருத்தைத் தெரிவித்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையான கருத்துகளைக் கூறும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பட்டியலில் கார்கேவும் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலாத் தலமான பஹல்காமின் பைசாரான் பள்ளத்தாக்கில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த மாதம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தானே காரணம் என தொடர்ந்து கூறிவரும் இந்தியா, தக்க பதிலடி கொடுக்கும் வகையில் படைகளைத் தயார்ப்படுத்தி வருகிறது.

சமீபத்தில் பாகிஸ்தனுக்கு பதிலடி கொடுக்கும் விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் நாளை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து மூன்று நாள்களுக்கு முன்பே தெரியும் என்பதால்தான் ஜம்மு - காஷ்மீர் பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

இந்தக் கருத்து குறித்து பதிலளித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவர் (கார்கே) என்ன மாதிரியான கருத்தைக் கூறுகிறார். ஒருபுறம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர்கள் (காங்கிரஸ்) நாட்டின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறுகிறார். மறுபுறம் நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

ஒரு பெரிய கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியில் மூத்த தலைவரிடமிருந்து இதைவிட பொறுப்பற்ற கருத்து வராது. பாதுகாப்பு ஒத்திகையில் மக்கள் அனைவரும் நாட்டுடனும் அரசுடனும் உறுதுணையாக இருக்கும்போது, இதுபோன்ற கருத்துகளை எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது மிகுந்த மனவேதனையை உண்டாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பிரதமருக்கு 3 நாள்களுக்கு முன்பே தெரியுமாம்! -காங். விமர்சனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments