FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதீஷ்குமார்!

பிகார் தேர்தலுக்கான முதல் பட்டியலை ஜேடியு வெளியிட்டுள்ளது.

Updated On : 15 அக்டோபர் 2025, 3:22 pm IST
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிதீஷ் குமார்
பகிர்:

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 57 வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஐக்கிய ஐனதா தளம் இன்று (அக். 15) வெளியிட்டதாக கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 பிகார் பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்டமாக ஐக்கிய ஜனதா தளம் 57 பேர் அடங்கிய வேட்பாளர்களின் பட்டியலை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் நிதீஷ் குமார் வெளியிட்டார்.

மஹானர் தொகுதியில் ஜேடியு மாநிலத் தலைவர் உமேஷ் குஷ்வாஹா, பிகார் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார், போரே (எஸ்சி)-க்கு சுனில் குமார் உள்ளிட்டோரை கட்சி அங்கீகரித்தது.

Advertisement

Advertisement

முன்னதாக, பாஜக பீகார் தேர்தலுக்கான 71 வேட்பாளர்களின் முதல் பட்டியலை செவ்வாயன்று வெளியிட்டது.

ஜேடியு அறிவித்த 51 தொகுதிகளில் லோக்ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் கேட்டிருந்த 4 இடங்களும் அடங்கும்.

பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வரும் அக்டோபர் 6 மற்றும் 11 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும்.

பிகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

summary

The United National Party (UNP) released the first list of 57 candidates for the Bihar Assembly elections today (Oct. 15), according to the party's official statement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments